டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு வெளியானதை அடுத்து மத்திய அரசு திட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் மாநில பாஜகவின் கோரிக்கையை ஏற்றே தமிழகத்தின் டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட்டதாக பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது, இந்த நிலக்கரி சுரங்க விவகாரத்தை சிலர் அரசியல் செய்ய முயற்சிக்கின்றன. இதை மக்கள் அடையாளம் காண வேண்டும். அவர்களின் உண்மை முகத்தை அறிந்துகொள்ள வேண்டும் என திமுக மற்றும் காங்கிரஸை மறைமுகமாக விமர்சித்தார்.