விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, முதல்வர் ஸ்டாலின் திராவிட இயக்கத்தின் கொள்கைகளை பாதுகாக்கும் மகத்தான பணியை செய்கிறார்.

பெரியார், அண்ணா மற்றும் கலைஞர் கட்டிக் காத்த சமூக நீதி அரசியலை முதல்வர் ஸ்டாலின் வெற்றிகரமாக முன்னெடுத்து செல்கிறார். சமூக நீதிக்காக மட்டும் தான் என்னை போன்றவர்களும் முதல்வர் ஸ்டாலினோடு கைகோர்த்து நிற்கிறோம். தேர்தலுக்காக மட்டும் முதல்வர் ஸ்டாலினோடு இணையவில்லை என்று கூறியுள்ளார்.