தஞ்சாவூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் தண்ணீர் பந்தலை திறந்து வைத்ததோடு, பொதுமக்களின் தாகம் தீர்ப்பதற்காக தர்பூசணி வழங்கினார். அதன் பிறகு முன்னாள் அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என்று நீதிமன்றமும் கடைக்கோடி தொண்டர்களும் முடிவு செய்து விட்டார்கள்.

அதிமுகவுக்கும் இனி ஓ. பன்னீர் செல்வத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஓபிஎஸ் அணி சார்பில் திருச்சியில் வருகின்ற 24-ஆம் தேதி முப்பெரும் விழா நடத்தி முக்கிய தீர்மானங்களை நிறைவேற்ற இருப்பதாக கேள்விப்பட்டேன். இதை கேட்கும் போது எனக்கு சிரிப்பு தான் வருகிறது. எடப்பாடி பழனிச்சாமியிடம் இரட்டை சிலை சின்னம் இருக்கிறது. எனவே இனி யாராலும் சின்னத்தை முடக்க முடியாது என்று கூறினார்.