தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கிழக்கு திசை வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும். இதேபோன்று இன்று முதல் ஏப்ரல் 10-ம் தேதி வரை தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தில் ஓரிரு  இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் போன்ற பகுதிகளின் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.