திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நெடுவிளை பகுதியில் சாலமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பால்ராஜ் என்பவருக்கும் இட பிரச்சனை காரணமாக தகராறு இருந்தது. இந்நிலையில் பிரச்சனைக்குரிய இடத்தில் பால்ராஜ் மது பாட்டிலை மறைத்து வைத்திருந்ததாக தெரிகிறது. இதனை பார்த்த சாலமன் தனது மனைவி கிருஷ்ணகுமாரியிடம் இது பற்றி கூறியுள்ளார்.சம்பவம் நடைபெற்ற அன்று கிருஷ்ணகுமாரி வீட்டின் பின்புறம் பூக்கள் பறித்துக் கொண்டிருந்தார்.

அப்போது பால்ராஜ் அந்த வழியாக சென்றார். அவரிடம் கிருஷ்ணகுமாரி மது பாட்டிலை மறைத்து வைத்தது குறித்து தட்டி கேட்டார். இதனால் ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த பால்ராஜ் கிருஷ்ணகுமாரியை தாக்கினார். இதில் காயமடைந்த கிருஷ்ணகுமாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பால்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.