சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி சுப்பிரமணியபுரம் மூன்றாவது விதியில் பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இரட்டை பெண் குழந்தைகள் இருந்துள்ளனர். அதில் 13 வயதுடைய மேகனா என்ற சிறுமி அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென காய்ச்சல் ஏற்பட்டதால் மேகனாவை காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து மேகனாவுக்கு மருந்து மாத்திரைகள் கொடுத்து ஓய்வு எடுக்குமாறு கூறியுள்ளனர்.

ஆனாலும் காய்ச்சல் சரியாகவில்லை. நேற்று காய்ச்சல் அதிகமாகி அபாய கட்டத்திற்கு சென்றதால் பாண்டி தனது மகளை காரைக்குடியில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் மேகனா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.