சென்னை தாம்பரம் சேலையூர் பகுதியில் பெண்களின் உள்ளாடைகளை திருடிவந்த சைக்கோ திருடனை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். தமிழ் பிரபு (வயது 28) என்ற அவர் தஞ்சையை சேர்ந்தவர் என்று விசாரணையில் தெரியவந்தது. சிறுவயது முதலே பெண்களின் உள்ளாடை மீது ஈர்ப்பு இருந்ததால் திருடியதாக கூறிய அவர், தனியாக இருக்கும் பெண்களை மிரட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் போலீஸ் விசாரணையில் கூறியுள்ளார். இதுவரை யாரும் புகார் கொடுக்காததால் தைரியமாக சுற்றி வந்த அவர் தற்போது சிக்கியுள்ளார்.