கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆலந்துறை செம்மேடு அருகே இருக்கும் பட்டியார் கோவில் பகுதியில் கூலி வேலை பார்க்கும் கருப்பன்(73) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று அதிகாலை கழிப்பறை செல்வதற்காக வீட்டை விட்டு வெளியே வென்றார். அப்போது திடீரென வந்த ஒற்றை யானை கருப்பனை தும்பிக்கையால் தாக்கி தூக்கி வீசியது. இதனால் படுகாயமடைந்த கருப்பனின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

பின்னர் யானையை காட்டுக்குள் விரட்டி அடித்தனர். இதற்கிடையே காயம் அடைந்த கருப்பன் ஆம்புலன்ஸ் மூலம் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அந்த பகுதியில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.