மதுரை மாவட்டத்தில் உள்ள ஊத்தக்கடை சித்தி விநாயகர் கோவில் தெருவில் தில்லை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுந்தரி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் மதுரை நகர் பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து சுந்தரி ஸ்கூட்டரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

இந்நிலையில் மேலூர் மெயின் ரோடு உத்தங்குடி அருகே சென்ற போது பின்னால் வந்த தனியார் பேருந்து ஸ்கூட்டர் மீது மோதியது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த சுந்தரி பேருந்து சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று சுந்தரியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.