கரூர் மாவட்டத்தில் உள்ள வீரசிங்கம்பட்டியில் விவசாயியான காளிதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் பசு மாடுகளை வளர்த்து வருகிறார். பொதுவாக பசு ஒரு கன்றை மட்டும் ஈனும். ஆனால் காளிதாஸ் வளர்த்து வந்த பசு மாடு  நேற்று இரண்டு கன்று குட்டிகளை ஈன்றது. இதுகுறித்து அறிந்த பொதுமக்கள் பசுவையும், கன்றுக்குட்டிகளையும் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர். பசுவும், கன்று குட்டிகளும் நலமாக இருப்பதால் காளிதாஸின் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் உள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக் பரவி வருகிறது.