கரூர் மாவட்டத்தில் உள்ள வீரசிங்கம்பட்டியில் விவசாயியான காளிதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் பசு மாடுகளை வளர்த்து வருகிறார். பொதுவாக பசு ஒரு கன்றை மட்டும் ஈனும். ஆனால் காளிதாஸ் வளர்த்து வந்த பசு மாடு நேற்று இரண்டு கன்று குட்டிகளை ஈன்றது. இதுகுறித்து அறிந்த பொதுமக்கள் பசுவையும், கன்றுக்குட்டிகளையும் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர். பசுவும், கன்று குட்டிகளும் நலமாக இருப்பதால் காளிதாஸின் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் உள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக் பரவி வருகிறது.
இரண்டு கன்று குட்டிகளை ஈன்ற பசு…. ஆச்சரியத்துடன் பார்த்து சென்ற பொதுமக்கள்… வைரலாகும் புகைப்படம்…!!
Related Posts
குலதெய்வம் கோவிலுக்கு சென்ற….சிறுவனின் உயிரைப் பறித்த வெயில்…!!
ராணிப்பேட்டையில் சுட்டெரித்த வெயிலால் சுருண்டு விழுந்த சிறுவன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டையை அடுத்த ரத்தினகிரியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான சத்யா, தனது மனைவி, 2 மகன்களுடன், நத்தத்தில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்தச் சென்றுள்ளார். அப்போது, வெயிலின்…
Read more“பள்ளியை மூடக்கூடாது” மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்ட மக்கள்…!!
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியில் 1990ஆம் ஆண்டு நடுநிலைப்பள்ளி தொடங்கப்பட்டு தற்போது வரை செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் 10-க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த ஆண்டுக்கான தேர்வுகள் முடிந்த நிலையில் பள்ளியில் போதுமான நிதி இல்லை…
Read more