தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன் பட்டினம் சிதம்பரேஸ்வரர் கோவில் கடற்கரைப் பகுதியில் அம்சவள்ளி தனது குழந்தைகளுடன் தங்கி இருந்து துளசி மாலை உள்ளிட்ட பேன்சி பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வியாபாரம் முடிந்ததும் அம்சவள்ளி தனது குழந்தைகளுடன் தூங்கினார்.

நேற்று அதிகாலை கண்விழித்து பார்த்தபோது அம்சவள்ளியின் இரண்டு வயது மகள் கார்த்திகை வள்ளி காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தினரிடம் இதுகுறித்து விசாரித்தும் குழந்தையை கண்டுபிடிக்க இயலவில்லை. இதுகுறித்து அம்சவள்ளி குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தசரா திருவிழாவில் குழந்தையை கடத்தி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.