கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பூதிநத்தம் கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் கஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான கஜேந்திரன் வயிற்று வலியால் அவதிப்பட்டு  வந்தார். இதற்காக பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் அவரது வயிறு வலி சரியாகவில்லை.

இதனால் மன உளைச்சலில் இருந்த கஜேந்திரன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கஜேந்திரனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.