மதுரை மாநகராட்சி 20-வது வார்டுக்கு உட்பட்ட விளாங்குடி சொக்கநாதபுரம் 1-வது தெருவில் ஒருவர் வீடு கட்டி வருகிறார். இந்த பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாடிக்கு செல்வதற்கான படிக்கட்டு கட்டப்பட்டது. நேற்று அந்த படிக்கட்டுக்கு அருகே 2 ஆண்கள், 2 பெண்கள் என 4 தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக மாடிப்படி மொத்தமும் தொழிலாளர்கள் மீது பெயர்ந்து விழுந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் நான்கு பேரையும் மீட்டனர். ஆனால் திண்டுக்கல்லை சேர்ந்த மூக்காயி என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து படுகாயமடைந்த தொண்டி சாமி, கட்டையன், ஜோதி ஆகிய 3 பேரையும் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.