சென்னையில் நடைபெற்ற தேசிய அபாகஸ் ஒலிம்பியாட் போட்டியில் அனைத்து மாநிலங்களில் இருந்தும் 2500-க்கும் அதிகமான பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்த போட்டியில் கடையநல்லூர் இடைகால் குளோபல் சி.பி.எஸ்.இ பள்ளியில் இருந்து ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் நான்காம் வகுப்பு மாணவர்களுக்கான பிரிவில் குளோபல் பள்ளி மாணவியான குணமிராள் முதல் பரிசுக்கு நிகரான பரிசினை பெற்று அசத்தினார்.

வேகமாக கணக்குகளை செய்ததற்கும், மேடையில் நன்றாக செய்து காண்பித்ததற்காகவும், மிக மிக குறைவான நொடியில் முதல் பரிசை இழந்ததற்காகவும் குணமிராளுக்கு அந்த பரிசு வழங்கப்பட்டது. இந்தியன் அபாகஸ் நிறுவனத்தினர் சாதனை படைத்த மாணவியை கௌரவித்து பாராட்டினார்கள். இதேபோல் பள்ளியின் ஆசிரியர்கள், முதல்வர் உள்ளிட்ட பலர் மாணவியை பாராட்டியுள்ளனர்.