கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள படதாசம்பட்டியில் 40 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கூலி தொழிலாளியான திருமால் என்பவர் தனக்கு அண்ணி முறையான அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த பெண் கடந்த 2021-ஆம் ஆண்டு எலிமருந்தை தின்று தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் திருமாலை கைது செய்தனர். இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி திருமாலுக்கு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.