ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஏகாம்பரநல்லூர் பிள்ளையார் கோவில் தெருவில் சிவானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரிஹரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சிப்காட்டில் இருக்கும் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக கடன் தொந்தரவால் அவதிப்பட்ட ஹரிஹரன் அளவுக்கு அதிகமாக மது குடித்து வந்துள்ளார்.

நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் மது அருந்திவிட்டு ஹரிஹரன் முகுந்தராயபுரம் பகுதியில் ரயில் முன் பாய்ந்தார். இதனால் கை, கால்கள் துண்டாகி சம்பவ இடத்திலேயே ஹரிஹரன் உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஹரிஹரனின் உடலை மீட்டு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.