விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலில் கொள்ளு மேடு விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த மீனாட்சி என்பவர் உணவு பரிமாறும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை பார்த்து கொண்டிருந்த போது மீனாட்சி எதிர்பாராதவிதமாக ஹோட்டலின் அருகில் இருந்து இரும்பு வேலியை தொட்டார்.

இதனால் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த மீனாட்சி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீனாட்சியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவருக்கு 10 மற்றும் 7 வயதில் இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவமாக அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.