கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பழைய வெங்கூர் கிராமத்தில் ஆனந்த நாயகி(50) என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் 16-ஆம் தேதி ஆனந்தநாயகி செட்டி தாங்கல் பேருந்து நிறுத்தத்திற்கு சென்றார். அந்த வழியாக வந்த அரசு டவுன் பேருந்தில் ஏறியுள்ளார்.

அப்போது கண்டக்டராக வேலை பார்த்த முருகன் என்பவர் ஆனந்தநாயகியை பார்த்து ஓசியில் பஸ் ஏற வந்துட்டியா பஸ்ஸை விட்டு கீழே இறங்கு என தகாத வார்த்தையால் பேசி ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆனந்தநாயகி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் முருகன் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.