ஈரோடு மாவட்டத்திலுள்ள தயிர்பாளையம் கிராமத்தில் விவசாயியான வெங்கடாசலம் என்பவர் வசித்து வருகிறார். நேற்று இரவு நேரத்தில் ஆட்டுப்பட்டிக்குள் நுழைந்த மர்ம விலங்கு 4 ஆடுகளை கடித்து கொன்றது. இதே போல் செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான 7 ஆடுகளையும் மர்ம விலங்கு கடித்தது.

இதுகுறித்து போலீசாரும், வனத்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். தெருநாய்கள் கடித்ததால் ஆடுகள் உயிரிழந்ததா? அல்லது விலங்குகளின் நடமாட்டம் இருக்கிறதா? என தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.