கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பறையன்விளை விநாயகர் தெருவில் அந்தோணி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சத்திய கலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் இரண்டாவது மகள் ஸ்ரீ லட்சுமி அரசு பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். ஸ்ரீ லட்சுமியும், அவரது சகோதரியும் அடிக்கடி சண்டை போட்டு வந்தனர். நேற்று முன்தினம் வீட்டில் மாவு அரைப்பது தொடர்பாக அக்கா, தங்கை இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.

பின்னர் சத்யகலா தனது மூத்த மகளை கம்ப்யூட்டர் வகுப்பில் சேர்த்து விடுவதற்காக அழைத்து சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது ஸ்ரீ லட்சுமி தூக்கில் தொங்கியபடி உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தனது மகளை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்ரீ லட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.