கடலூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளூரில் மகேந்திரவர்மன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி ரஞ்சனி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஞ்சனியின் வாட்ஸ் அப் எண்ணிற்கு பகுதி நேர வேலை இருப்பதாக குறுந்தகவல் வந்தது. அந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசிய போது ஒருவர் தனது பெயர் பிரியா என அறிமுகப்படுத்திக்கொண்டார்.

இதனையடுத்து தான் 20 வேலைகள் தருவதாகவும், அதனை முடித்து கொடுத்தால் பணம் அனுப்புவதாகவும் அவர் தெரிவித்தார். பின்னர் கூறியபடி அதற்கான பணத்தையும் அனுப்பினார். இதனை தொடர்ந்து பணம் கட்டினால் வேலை கிடைக்கும் என கூறியதால் ரஞ்சனி 3 தவணைகளாக 1 லட்சத்து 81 ஆயிரம் ரூபாயை செலுத்தி உள்ளார். அந்த பணத்தை வாங்கிக் கொண்டு அவர்கள் வேலை தரவில்லை. இது குறித்து ரஞ்சனி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.