திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகள் பல்வேறு வாகனங்களில் வருவதால் நகரின் முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பகல் நேரம் வெப்பம் நிலவினாலும் மாலையில் இதமான காற்றுடன் குளிர்ச்சியான சூழல் நிலவியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் பேரிஜம் ஏரி, மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம், பில்லர் ராக், குணா குகை, மோயர் பாயிண்ட் உள்ளிட்ட இடங்களை சுற்றுலா பயணிகள் சுற்றி பார்த்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர். கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் கட்டண விவரங்களை தெளிவாக எழுதி வைக்க வேண்டும் எனவும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.