தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவர் காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி தொடர்ந்து சிறுமிக்கு தொந்தரவு அளித்தார்.

இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் பொம்மிடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சந்தோஷ் குமாரை கைது செய்தனர்.