கடலூர் மாவட்டத்தில் உள்ள மேலிருப்பு கிராமத்தில் தமிழரசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ் குமார்(34) என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு சிவரஞ்சனி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் தமிழ் குமார் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு பணத்தை இழந்து விட்டார். எனவே கடனாக வாங்கிய பணத்தை திரும்பிக் கொடுக்க இயலவில்லை.

இதனால் பணம் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்தனர். இது தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தமிழ் குமார் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி தமிழ் குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.