விஷம் குடித்து செத்தாலும் சாவோம். ஆனால் இபிஎஸ் பக்கம் செல்ல மாட்டோம் என ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், அதிமுக தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமியை ஏற்கவில்லை என்பதை பலமுறை பார்த்துள்ளோம்.  அதிமுக வெற்றி முகத்துக்கு அழைத்துச் செல்வேன் என்று இபிஎஸ் எப்படி கூறுகிறார். அதிமுக தொடர் தோல்வி அடைவதற்கு இபிஎஸ் ஒருவரே  காரணம் என விமர்சித்துள்ளார்.