தேமுதிக தலைவர் விஜயகாந்த்க்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாக வெளியான தகவலுக்கு தேமுதிக தலைமை மறுப்பு தெரிவித்திருந்தது. இதுகுறித்து பேசியிருக்கும் அமைச்சர் மா.சுப்ரமணியம், “தொடர் இருமல் காரணமாக விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். சிறுநீரக மாற்று செய்யப்பட்டிருப்பதால் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.

அவர் ஐசியூவில் இருக்கிறாரே தவிர, மற்றபடி அவருடைய உடல்நிலை சீராகவே இருக்கிறது. மருத்துவமனையில் அவரை சிறப்பாக கவனித்துக் கொண்டு இருக்கின்றனர் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.