சென்னை மாவட்டத்தில் உள்ள பட்டாபிராம் சோராஞ்சேரி பகுதியில் பூந்தமல்லி பார்ன்ஸ் குடியிருப்பு அமைந்துள்ளது. சேரஞ்சேரி கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் வீட்டில் வளர்க்கக்கூடிய மாடுகளை தெருக்களில் மேய விடுவதாக தெரிகிறது. நேற்று பூந்தமல்லி பார்ன்ஸ் குடியிருப்பு பகுதியில் நடந்த பசுமாடு வீட்டு வாசலில் கை குழந்தைக்கு உணவு ஊட்டி கொண்டிருந்த பெண்ணை முட்ட முயன்றது. இதனால் சுதாரித்துக் கொண்டு அந்த பெண் விலகினார். ஆனாலும் மாடு விடாமல் அவரை முட்ட விரட்டியுள்ளது.

இதனால் பதற்றத்துடன் அந்த பெண் தனது குழந்தையுடன் அருகில் இருக்கும் மற்றொரு வீட்டிற்குள் ஓடி தப்பிவிட்டார். இது தொடர்பான காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. கடந்த 10 நாட்களில் தொடர்ந்து மூன்று பேரை மாடுகள் முட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது பெண்ணை மாடு முட்ட வந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.