நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் பன்னீர் கிராமத்திற்குள் 2 குட்டிகளுடன் நுழைந்த கரடி சாலையோரம் உலா வந்தது. இதனை பார்த்த வாகன ஓட்டிகள் அச்சத்தில் சற்று தொலைவில் வாகனங்களை நிறுத்திக் கொண்டனர்.

இதனையடுத்து வாகன ஓட்டிகள் செல்போனில் கரடிகளை வீடியோ எடுத்தனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்நிலையில் கரடிகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.