புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புலவன்காடு பிடாரியம்மன் கோவிலில் கடந்த 22-ஆம் தேதி மது எடுப்பு திருவிழா நடைபெற்ற போது இரு தரப்பை சேர்ந்த வாலிபர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். அன்று இரவு ஒரு தரப்பை சேர்ந்தவர்கள் ஒரு வாலிபரின் வீட்டிற்குள் நுழைந்து பொருட்களை சேதப்படுத்தி உள்ளனர். மேலும் அந்த வாலிபரின் தங்கை, தாய் ஆகியோரை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று ஒரு இடத்தில் அடைத்து வைத்துள்ளனர்.

இதுகுறித்து அறிந்த ஆலங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு தீபக் ரஜினி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரை மீட்டனர். இது தொடர்பாக இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் இரு தரப்பைச் சேர்ந்த 15 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.