புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வகோட்டை தாலுகா அலுவலகம் அருகே பழனியப்பன் என்பவருக்கு சொந்தமான தைலமர தோப்பு அமைந்துள்ளது. நேற்று சுமார் 1 1/2 ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த தோப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்த தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அங்கு பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

தீயணைப்பு வீரர்கள் விரைவாக செயல்பட்டதால் அருகில் இருந்த வீடுகளுக்கும், வயல்வெளிகளுக்கும் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இதே போல் முருகேசன் என்பவருக்கு சொந்தமான தைல மர காட்டில் பற்றி எரிந்த தீயையும் தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.