ஈரோடு மாவட்டத்தில் உள்ள சுண்ணாம்பு ஓடை பகுதியில் கருப்பண்ணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினர் இரண்டு மகள்கள் இருக்கின்றனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கருப்பண்ணசாமி விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் மூத்த மகள் மயூரி சையத் இப்ராஹிம் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

இதற்கு இப்ராஹிம் குடும்பத்தினரும் அனிதாவும் சம்மதம் தெரிவித்தனர். ஆனால் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த கருப்பண்ணசாமி சொத்து பிரச்சினை தொடர்பாகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த 22-ஆம் தேதி விசாரணைக்கு வரும் வழக்கில் ஆஜராக கூடாது எனக் கூறி கருப்பண்ணசாமி தனது உறவினர்களுடன் இணைந்து மயூரி, அனிதா ஆகியோரை பட்டை, இரும்பு பைப்புகளால் தாக்கியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த சிசிடிவி காட்சிகள் சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.