ஈரோடு மாவட்டத்தில் உள்ள வெண்டிபாளையம் பகுதியில் தனியார் ஹோட்டல் அமைந்துள்ளது. நேற்று மதியம் 4 பேர் குடிபோதையில் ஹோட்டலுக்கு சென்று பரோட்டா மற்றும் பிரியாணி வாங்கி சாப்பிட்டுள்ளனர். இதனையடுத்து பணம் கொடுக்காமல் அங்கிருந்து செல்ல முயன்ற நான்கு பேரிடமும் உரிமையாளர் பணம் கேட்டார்.

இதனால் கோபமடைந்த நான்கு பேரும் உரிமையாளரை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தகராறு செய்த மரப்பாலம் பகுதியைச் சேர்ந்த ஜான்சன், புவனேஸ்வரன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். தலைமறைவான சூர்யா, மாதேஸ்வரன் ஆகியோரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.