ஈரோடு மாவட்டத்திலுள்ள கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 13-ஆம் தேதி சிறப்பாக தொடங்கியது. இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு கஸ்தூரி அரங்கநாதரின் உற்சவர் சிலைக்கு திருமஞ்சனம் நடைபெற உள்ளது. அதற்காக இளநீர், பால், தயிர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற உள்ளது.

காலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பசுமாடுகள் அழைத்து செல்லப்படும். பின்னர் ஜனவரி 11-ஆம் தேதி இரவு 7 மணிக்கு நம்மாழ்வார் மோட்சம் திருவாசல் சாற்று முறையுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு வழங்குவதற்காக ஐம்பதாயிரம் நாடுகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.