திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள இடையப்பட்டியில் அடைக்கல சாமி(28) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் அடைக்கலசாமியை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த திண்டுக்கல் போக்சோ நீதிமன்றம் அடைக்கல சாமிக்கு 20 வருடங்கள் ஜெயில் தண்டனையும், 3000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.