தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஈட்டியம்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு அருகே சிறுவர்கள் இயற்கை உபாதை கழிக்க சென்ற போது உண்டியல் உடைக்கப்பட்டு சிதறி கிடந்ததை பார்த்து கிராம மக்களிடம் கூறியுள்ளனர். உடனே கிராம மக்கள் அங்கு சென்று பார்த்த போது இரும்பு கேட்டில் பூட்டப்பட்டிருந்த பூட்டு மற்றும் நுழைவு வாயில் கதவில் போடப்பட்டிருந்த பூட்டு அறுக்கப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது உண்டியலில் இருந்த 80 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.