தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தடங்கம் பகுதிகளில் இருக்கும் தனியார் பள்ளியின் பின்புறம் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் ஒட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜெயவேல் என்பது தெரியவந்தது.

கட்டிட மேஸ்திரியான ஜெயவேல் இறப்பு குறித்து அவரது தந்தை கோவிந்தசாமி, ஜெயவேலின் அக்காள் கணவர் திருப்பதி ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்து பிரச்சினை காரணமாக ஜெயவேல் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.