நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் நியாய விலைக் கடைகளில் ஆய்வு நடத்த மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் க.பா அருளரசு உத்தரவை பிறப்பித்தார். அதன் அடிப்படையில் கூட்டுறவு சார் பதிவாளர்களைக் கொண்டு பறக்கும் படை அமைக்கப்பட்டது.

இந்நிலையில் பறக்கும் படையினர் மோகனூர், நாமக்கல் வட்டாரங்களில் இருக்கும் 76 நியாய விலை கடைகளில் திடீரென ஆய்வு நடத்தியுள்ளனர். அதில் 33 நியாய விலை கடைகளில் இருப்பு குறைவு, இருப்பு அதிகம் கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. அதன்படி விற்பனையாளர்களிடமிருந்து 5575 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது.