வேலூர் மாவட்டத்தில் செயல்படும் மேல்பாடி அரசு ஆரம்பப் பள்ளியில் இன்று உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு விழாவாக கொண்டாடப்பட்டது.  இவ்விழாவிற்கு தலைமை ஆசிரியை ரஜினி தலைமை தாங்கினார். மேலும் இந்த விழாவில் தாய்மொழியான தமிழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக தமிழ் எழுத்தின் முதல் எழுத்தான ‘த’ எழுத்து வடிவில் மாணவ, மாணவிகளை  அமர வைத்தனர்.

அப்போது தலைமை ஆசிரியை ரஜினி பேசும் போது கூறியுள்ளதாவது,”தமிழர்களாகிய நாம் எத்தனை மொழிகள் பயின்றாலும் நமது சிந்தனை எப்போதும் தாய்மொழியில் மட்டுமே இருக்க வேண்டும். மேலும் நம் குழந்தைகளை தமிழ் மொழியில் படிக்க வைத்து தமிழின் பெருமைகளையும் சொல்லி கொடுக்க வேண்டும்” என்று கூறினார். இந்த நிகழ்வில் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.