திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் குற்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்கும் பொருட்டு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பாளையங்கோட்டை பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் சுபாஷ், காவேரி உடையார் என்பது தெரியவந்தது.

இருவரும் அரிவாள் உட்பட பயங்கர ஆயுதங்களை வைத்திருந்ததும் சோதனையில் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சுபாஷ் மற்றும் காவிரி உடையார் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.