திமுக இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,  இன்னைக்கு, மத்த கட்சியல்ல சொல்றான், அவ்வளவு இருக்கு, இவ்வளோ இருக்குன்னு, சொல்ட்டு. ஆனா, உண்மையிலே, இளைஞர்கள் அதிகமாக இருக்கிற ஒரு கட்சி, அந்த காலத்திலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் தான்.

நாங்க எல்லாம் படிக்கிற மாணவர்கள் காலத்தில இருந்து, இளைஞர் அணி, மாணவர் அணி, இப்படிலாம் இருந்த காலத்தில இருந்து, அதுதான், நம்முடைய கட்சியினுடைய அந்த காலத்துல இருந்து இருக்கிற, சிறப்பான இலக்கு. அதை தான், நாங்கள் இப்போதும் செய்து கொள்ள வேண்டும். தமிழக முதல்வர், தளபதி அவர்கள் எப்படி எல்லாம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியாதது அல்ல.

மாநில சுயாட்சியை காப்பாற்ற வேண்டும்  என்பதற்காக அவர் கொடுத்த குரலை, எல்லாம் நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆளுநர் மீது ஒரு உச்சநீதிமன்றத்திலே  வழக்கை தொடுத்திருக்கிறோம். அதெல்லாம், சிறப்பாக விரைவிலே நடைபெறும். அந்த அடிப்படையிலே தான், உங்களை அன்போடு கேட்டுக் கொள்வது, நமது ஒற்றுமை முக்கியம். இந்த  ஒற்றுமையை நாம் நிலை நாட்ட வேண்டும் என தெரிவித்தார்.