ஓ.பன்னீர்செல்வம் அணியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய அந்த அணியின் செய்தி தொடர்பாளர் கண்ணன்ஜி அவர்கள்  பேசும் போது, இல்லாத பதவியை… செல்லாத பொதுக்குழுவில் … தனக்குத்தானே போட்டுக்கொண்டு திரிகின்ற பொல்லாத பயந்தாங்க இந்த பழனிசாமி. துரோகமே பிறப்பு, துரோகமே வளர்ப்பு,  துரோகமே தன் வாழ்நாள் தொழிலாக செய்து செய்து, ஒட்டுமொத்த துரோகத்தையும் ஒத்தையில் அரங்கேற்றும் துரோகச்சாமி தான் இந்த சிலுவம்பாளையம் பழனிச்சாமி.

ஒட்டுமொத்த துரோகத்திற்கே கிரேட் மார்க் வாங்கிக் கொண்ட பாவி. கூட இருந்தே குழி பறிப்பான். உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்வான்.  பழகிய நபர்களுக்கு பாதகம் செய்வான். காலில் விழுவான். இல்லை இல்லை காலில் தவழ்வான். பின் கழுத்தையும் கடிப்பான். குழப்பத்தை உண்டாக்குவான். கூசாமல் பல கொடுமைகள் செய்வான். பல கொலைகளையும் புரிவான். அதன் பெயர் அரசியல் என்பான். அதன் பெயர் ராஜதந்திரம் என்றும் சொல்லுவான்.

 ரெட்டை கொலைகளை ஒற்றையாய் செய்வான். மாவட்ட செயலாளர் பதவி பறிக்க மரணத்தையே பரிசாகத் தருவான். சேலம் கண்ணனுக்கு செருப்பாய் இருப்பான். செங்கோட்டையனுக்கு பெட்டி தூக்குவான், பின் சட்டியும் கழுவுவான். சசிகலா வீட்டின் சாக்கடை அடைப்பை கூட சரி செய்வான். ஜால்ரா போட்டு சாதித்து விடுவான். அண்ணன் டிடிவி காலில் கிடப்பான். காலை நக்கியே  பிழைப்பான். நத்தை போல் ஊர்வான். நாயினும் கீழாய் மாறிடுவான். தான் தோன்றித்தனமாய் திரிவான். தனக்குத் தானே பட்டம் சூட்டி மகிழ்வான். கொள்ளை வழக்கில் அடிபடுவான்.

தூத்துக்குடி கொலை வழக்கில் பேச படுவான். 10.5% என சொல்லி பங்காளிகளை, பகையாளியாக்குவான். வன்னியர்களை அந்நியர்கள் ஆக்குவான். மிகவும் பிற்படுத்தப் பட்டுரை எல்லாம் பின்னுக்குத் தள்ளுவான். சீர் மரபினரை  சிதைப்பான். தென் தமிழகத்தையே பகைப்பான். கொங்கு மண்டல கழகமாக கழகத்தை மாற்றுவான்.

தலைகால் புரியாமல் திரிவான். தன் கூட இருப்பவர்களின் வளர்ச்சியவே கெடுப்பான். பொய்யிலே பிறந்தவன், பொய்யிலே வளர்ந்தவன், பொய்யை மட்டுமே சொல்கிறவன், பொய்யை மட்டுமே செய்கிறவன், காலிகளை வைத்து போலிகளைக் கொண்டு, இன்று பொய் மூட்டைகளை மதுரையில் அவிழ்த்து விடுகிறார் என கடும் சொற்களால் விமர்சனம் செய்தார். இதற்க்கு அதிமுக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.