தமிழகத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்குவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அனைத்து அதிகாரிகளுக்கும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் பேசிய முதல்வர், பொருளாதார வளர்ச்சிக்கு அரசு திட்டங்கள் மட்டுமல்லாமல் வங்கிகள் மூலமாக வழங்கப்படுகின்ற பல்வேறு கடன் உதவிகள் எவ்வளவு அவசியம் என்று உங்களுக்கு நன்றாக தெரியும்.

அத்தகைய கடனுதவிகள் வழங்குவதில் குறிப்பாக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்குவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே நிலுவையில் உள்ள சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.