திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு தொடர் விடுமுறை விடப்பட்டதால் கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனையடுத்து நகரின் முக்கிய பகுதிகளான அப்சர்வேட்டரி, ஏரி சாலை, உகார்த்தேநகர், செண்பகனூர் உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.

குறிப்பாக வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் சுற்றுலா பயணிகள் சிரமப்பட்டனர். இதனையடுத்து சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் உள்ள பல்வேறு இடங்களில் சுற்றி பார்த்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.