தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை முன்னதாகவே வெளியிட்டது. அதில் மே மாதம் துறை சார்ந்த தேர்வுகள் அப்ஜெக்டிவ் வகை மே 15ஆம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை நடத்தப்படும் எனவும் விளக்க வகை தேர்வு மே 22ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க பதினாறு வயது பூர்த்தி செய்தவர்கள் தகுதியானவர்கள் எனவும், 20 ரூபாய் பதிவு கட்டணமும் 200 ரூபாய் தேர்வு கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக ஏப்ரல் பதினைந்தாம் தேதி இரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஏப்ரல் இருபதாம் தேதி இரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக tnpsc அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.