தமிழகத்தில் அரசு, தனியார் பொறியியல், கலை கல்லூரிகளில் உள்ள எம்பிஏ, எம்சிஏ ஆகிய முதுகலை படிப்புகளில் சேர டான்செட் நுழைவுத்தேர்வை மாணவர்கள் எழுதுகின்றனர். இந்த ஆண்டு மார்ச் 25ம் தேதி நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் இன்று வெளியிட உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. டான்செட் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு அதில் வரும் மதிப்பெண்களின் அடிப்படையில் கலந்தாய்வு ஒன்று நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.