காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ் அழகிரி உட்பட 4 பேர் ரயிலை மறித்து கும்பகோணம் ரயில் தண்டவாளத்தில் நின்று போராட்டம் நடத்தினார். இந்த போராட்டத்தை கலாய்த்து தற்போது பாஜக அண்ணாமலை பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, நாங்கள் தேசிய கட்சி என்று கூறி தோய்ந்து போன காங்கிரஸ் தற்போது தங்களை தூக்கி சுமக்க பார்க்கிறார்கள். நாங்களும் ரயில் மறியல் போராட்டத்திற்கு செல்வோம் என்று கூறிவிட்டு சென்றிருக்கிறார்கள்.

எத்தனை பேர் தெரியுமா.? மாநில தலைவரையும் சேர்த்து 4 பேர். காங்கிரஸ் கட்சியின் கைச்சின்னத்தில் கூட 5 விரல்கள் இருக்கிறது. ஆனால் ரயில் மறியல் போராட்டத்தில் 4 பேர் தான் இருந்தார்கள். ஒரு எருமை மாட்டை கூட 4 பேரால் தடுத்து நிறுத்த முடியாது. இவர்கள் ரயிலை மறிக்கப் போகிறார்களாம். இதுதான் தற்போது காங்கிரஸ் கட்சியின் நிலைமை. மோடி என்பது ஒரு சமூகம். மேலும் அந்த சமூகத்தை விமர்சித்ததால் தான் தற்போது ராகுல் காந்தி தண்டனை பெற்று இருக்கிறார் என்று கூறினார்.