திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு மாணவர்கள்  போட்டி தேர்வுகள், ஆட்சிப் பணி தேர்வுகள், திறன் சார்ந்த தேர்வுகளுக்கு நாங்கள் தயார் செய்யும் பொருட்டு  மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம் அமைக்கப்பட்டிருக்கிறது. எனது கனவு திட்டமான நான் முதல்வன் திட்டத்தின் மூலம் இரண்டு ஆண்டுகளில் 29 லட்சம் மாணவர்களுக்கும்,  32,000 ஆசிரியர்களுக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

ஒரு வருடத்தில் ஒரு லட்சத்து  40 ஆயிரம் இளைஞர்களுக்கு  வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி….  அனைத்து தரப்பு மாணவர்களும் தொழில் கல்வியை கற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

2021 – 2022,  2022 – 2023, 2023 – 2024 ஆகிய மூன்று கல்வி ஆண்டுகளில் இந்த இட ஒதுக்கீட்டின் மூலம் 28,749 மாணவர்கள் பொறியியல், மருத்துவம், வேளாண்மை, சட்டம், மீன்வளம் மற்றும் கால்நடை மருத்துவம் ஆகிய படிப்புகளில் சேர்ந்து உள்ளார்கள்.