உள்ளடக்கிய கல்வித் திட்ட இலச்சினை மற்றும் சிறப்புப் பயிற்றுநர்களுக்கான “நலம் நாடி” செயலியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், “நலம் நாடி” செயலியை அறிமுகம் செய்து வைத்து, கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உண்டு உறைவிடப் பள்ளி மாணவர்களுக்கான ஊக்கத்தொகையை நேரடியாக வழங்கும் நேரடி பயனாளர் பண பரிவர்த்தனை செயல்பாட்டையும் தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் எளிதில் தங்களின் கோரிக்கைகளை பதிவு செய்யும் விதமாக இணையவழி குறைதீர் புலம் உள்ளீட்டு அமைப்பையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.