தமிழகத்தில் பள்ளி மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு அரசானது பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை இனி மாணவர்களுடைய வங்கி கணக்கில் நேரடியாகவே செலுத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். பொதுவாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கத்தொகை மாநில அளவிலிருந்து ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் அனுப்பப்படும்.

அதன் பிறகு மாவட்ட அளவிலிருந்து வட்டார அளவில் மாற்றப்பட்டு அதன் பிறகு ஒவ்வொரு பள்ளிக்கும் அனுப்பப்பட்டு மாணவர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால் மாணவர்களின் கையில் ஊக்கத்தொகை சென்றடைய அதிக காலம் எடுக்கிறது. இதனால் மாணவர்களுக்கு உரிய நேரத்தில் உதவி தொகை கிடைக்கும் பொருட்டு நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கிலேயே உதவித்தொகை செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.