பொங்கல் பரிசு தொகுப்பை நாளை காலை 10 மணிக்கு தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் நாளை காலை 10 மணிக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பை தொடங்கி வைக்கிறார். பொங்கலுக்கு 1000 ரூபாயும், பொங்கல் பரிசு தொகுக்கும் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக கடந்த 7ஆம் தேதிமுதல் டோக்கன்களும் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பை நாளை காலை ஆழ்வார்பேட்டையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

பொங்கல் பண்டிகையை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்பதற்காக தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்புடன் ரூ 1000   வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதனிடையே வருகின்ற 10ஆம் தேதி, அதாவது நாளை முதல் 13ஆம் தேதி வரை டோக்கனில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் குறிப்பிட்ட நாளில் பொதுமக்கள் பொங்கல் தொகுப்பு பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 10ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை டோக்கனில் குறிப்பிட்ட நாள், நாள் பார்த்து பொதுமக்கள் நேரடியாக சென்று பொங்கல் தொகுப்பு பெற்றுக் கொள்ளலாம். அதேபோல 13ஆம் தேதிக்குள் பொங்கல் தொகுப்பு பெற முடியாதவர்கள் 14ஆம் தேதி பொங்கல் தொகுப்பு பெற்றுக் கொள்ளலாம்  என தமிழக அரசு தெரிவித்துள்ளது.